Saturday, December 18, 2010

வலி

ரோஜா பறித்தேன்!
முட்குத்தி வலித்தது!
அவள் வாங்க மறுத்தபோது.......

ஈரம்

உன்னை பிரிந்து வாடும்போது!


குளித்து முடித்து பல மணி நேரம் கழித்தும்!

ஈரம் மட்டும் காயவில்லை!

கண்களில்...................

Friday, December 17, 2010

சூரியனாய் நான்

இரு நாட்கள் கண்விழித்து!
அயர்ந்து சோர்ந்த விழிகள்கூட!
காலை சூரியனாய் ஒளிர்கின்றது!
கண்ணே உன் பூ முகம் பார்க்கும் தருணம்!
முதல் முதலாய் பூவுக்காக ஒளிரும் சூரியனாய் நான்..... !

Wednesday, December 15, 2010

un peyar

தீடிரென்று! ஒரு கவிதை சொல் என்றாள்!
முடியவில்லை!
எவ்வளவு முயன்றும் உன் பெயர் மட்டுமே நினைவில் வருவதால்!

Monday, June 21, 2010

என் கவிதை புத்தகம்

பிரசுரம் ஆனது ஒரே நேரத்தில்!
வெளி வந்ததும் ஒரே நேரத்தில்!

என் கவிதை புத்தகம்!

அவள் கல்யாண அழைப்பிதழும் கூட!

நீள கவிதை!

சொற்களை சுருக்கி சுவையுடன்!
எழுதுவதுதான் கவிதை!
உன் நீண்ட வாக்கியமும் கவிதை
ஆகின்றதே!

             " உன் ஏக்க பெருமூச்சு!" 

கல்லறை

என்  கல்லறைக்கு!
வரும் வழியை முள் அகற்றி!
சுத்தம்  செய்யுங்கள்!

என்றாவது ஒரு நாள் அவள் வருவாள்!
அவள் கணவனுடன்!
  

Wednesday, June 16, 2010

Birth"day" gift

நீ கொடுத்த பரிசு என்று!
ஆண்டு முழுவதும் காத்து!
நீ பிறந்த தினமன்று!
திறந்ததிர்ந்தேன்!

              ''ராக்கி''

Tuesday, April 6, 2010

Kobam

ஆம்!
உன் மீது கோபம்தான்!

நேரம் ஆகிறது என்று, என்னை பிரிந்து உன் வீடு செல்லும் தருணம்!!
உன் உடன் நடக்கும்போது ஆசையுடன் கை பற்ற! நீ நாணத்துடன் உதறும்போது!!
சுவைக்க உன் இதழ் கேட்டு, நீ வெட்கத்தில் மறுக்கும்போது!!
உன் மேல் கோபம்தான்!
மாற்றான் தாய் கோபம் போல அல்ல!
குழந்தையுடன் தாய் கொள்ளும் கோபம் போல!
நீ என் குழந்தையை சுமக்க போகிறாய் என்றல்ல, எனக்கு உன்மேல் காதல்!
நீயே  என் சிசு  என பார்ப்பதால்!!!!!

Monday, January 18, 2010

Kadhal

உன்னை நேசித்தேன்!
உன் உயிர் கொண்டு  பேச வந்தேன்!
நீ!
என்னை நேசிக்காதே
இந்த மண்ணை நேசி என்கிறாய்!
நானும் நேசிப்பேன் உனக்காக இந்த மண்ணை!
என் கல்லறையில்!!