நான் மழையில் நனைந்தால்!
உன் கூந்தல் தேவை
என் விழி மழையை துடைக்க!
உன் விரல்கள் தேவை!
என் காயம் ஆற்ற!
உன் தொடுதல் வேண்டும்!
என் உறக்கம் துவக்க!
உன் தழுவல் வேண்டும்!
நான் சோர்வில் சாய்ந்தால்!
உன் மடி வேண்டும்!
.
.
.
.
என்னவளின் காலில் காயம்!
அவள் பாதத்தை அருகே பார்த்தேன்!
.
.
.
.
.
.
என் இதயத்திற்கு எப்படி தெரியும்!
உப்பு தண்ணிர் பட்டால் காயம் குணமாகும் என்று!
என் கண்களின் வழியே அவள் கால்களை நனைக்கிறதே!
உன்மேல்!
காதல் கொண்ட நொடி முதல்!
உனக்குள் புதைந்தேன்!
அன்று!
துளிர் விட்டு!
பின்பு!
செடியாகி! மரமாகி!
பூத்து குலுங்கி!
நேற்று!
காய் காய்த்து!
இன்று காதலில் கனிந்து!
கனியானேன்!
அன்பே!
நீ!
என்னை வெட்டி ருசிக்கலாம்!
ஆனால்!
ருசித்தபின்!
விதையை மீண்டும் உன்னுள் அன்பாக புதைத்து விடு!
மறுபடியும் வளர்வேன்!
காதலுடன்! நம் காதலுடன்!
அழகான முன்னிரவு நேரம்!
கூடு திரும்பும் பறவைகளின் கொஞ்சல் ஓசை!
உடலை ஊடுருவி செல்லும் தென்றல்!
காதல் சொல்லி காயும் நிலவு!
நானும் அவளும் தனிமையில்!
...அவள் கை பிடித்து முகம் பார்த்து!
உன்னை காணும்போது!
என் மூளைக்குள் பூ பூக்கிறது என்றேன்!
அவள்...
என்னை நெருங்கி!
கண்களை நோக்கி!
காதலுடன்!
.
.
.
.
.
.
.
.போடா "மரமண்டை" என்றால்...! ;)
நீயும் நானும்!
கருவில் இருந்து பிறந்த தினம் வெவ்வேறுதான்!
ஆனால்!
காதல் எனும் கருவில்!
ஒரே நாளில் ஒன்றாக உயிர் பெற்றோம்!
ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினமே!
இன்றும்தான்!
இன்று ஒருநாள் மட்டும்!
உலக காதலர்களுடன் கொண்டாடுவோம்!
Happy valentine's Day to all.... by us..;)
சிறு மீன்கள் ஓட!
விட்டு விட்டு ! பெரிய மீனுக்கு காத்திருக்குமாம்!
கொக்கு!
அது போல!
விலை உயர்ந்த ஆபரணங்கள்!
மணி மாலைகள் சூடியும்!
நான் கட்டும் மாங்கல்யத்திற்கு
ஏங்கி! மணமேடையில் நீ!
விடி காலை வேலையில்!
நல்ல உறக்கம்!
திடீரென எங்கோ!
குயில்கள் கூவும் ஓசை!
மங்கள வாத்திய முழக்கம்!
ஒட்டு மொத்தமாய் இனிய குரல்களில் பாடல்!
ரம்யமான இசை கற்றைகள்!
மெல்ல கண் விழித்து பார்த்தேன்!
எந்தன் செல்போன் சிணுங்கி கொண்டிருந்தது!
உனக்காக வைத்த பாடல் கொண்டு!
விண்ணில் சென்று!
விண்மீன் கொண்டு வந்தேன்!
வேண்டாம் அன்பே என்றாய்!
சுட்டெரிக்கும் சூரியன் கொண்டு வந்தேன்!
குளுமை பூக்கும் நிலவு கொண்டு வந்தேன்!
அனைத்தையும் உதறி தள்ளினாய்!
கோபம் கொண்டு வினவினேன்!
என்னதான் வேண்டும் உனக்கு என்று!
நீ வாழும் வீடும் நான் வாழும் உன் மார்பும் போதும் என்றாய்!
கண்ணீர் துளித்தேன்! என் மடதனத்தை எண்ணியவாறு!
கொட்டும் மழைக்கு பயந்து
வண்டியை நிறுத்தி விட்டு கடையோரம் ஒதுங்கினேன்!
மழை கொட்டு அணிந்து இருந்தும் மனதில் சிந்தனை!
வேளைக்கு போகலாமா வேண்டாமா என்று!
தெரு முனை டீ கடையில் இருந்து ஒரு சிறுவன்
சாக்கு பை போர்த்தி கொண்டு
கொட்டும் மழையில் நடந்து வந்தான்
நான் நின்ற கடைக்கு டீ கொடுப்பதற்கு!