Tuesday, January 27, 2015

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை

ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை 


சில புத்தகங்கள் படிக்கும்போதுதான், எப்படா நேரம் கிடைக்கும் அந்த மீதி புத்தகத்தை படிக்கலாம் என்ற ஆர்வம் இருக்கும், இது அவ்வகையில் சேர்ந்தது ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை - The Man-Eating Leopard of Rudraprayag; by Jim Corbett என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம், ஒரு வேட்டைக்காரன் சிறந்த எழுத்தாளனை இருப்பதை பார்க்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. அல்லது தஞ்சாவூர்க்கவிராயர் மொழி பெயர்ப்பின் இயல்பா என புரியவில்லை, ஒரு ஆட்கொல்லி சிறுத்தையை பற்றியும் அதை வேட்டையாடி மக்களை காப்பாற்றிய விதத்தையும் ஹீரோயிசம் இல்லாமல் விறுவிறுப்பாய் சொல்லியது வாசகனாய் என்னை கட்டி போட்டு கையில் எடுத்த இரண்டே நாளில் புத்தகத்தை படித்து முடிக்கவும் தூண்டியது, சிறுத்தையின் ஆபத்தை விவரித்ததோடு நில்லாமல் இயற்கை விதிகளையும் ஆங்காங்கே விவரித்து வந்ததும் சிறப்பியல்பே!

நூலில் இருந்து,

அந்த விலங்கு செய்த ஒரே குற்றம் - அதுவும் இயற்கைச்சட்டத்துக்கு  எதிரானது அல்ல.
ஆனால் மனிதனின் சட்டங்களுக்கு எதிரானது - அது  மனித ரத்தம் சிந்த காரணமாக இருந்தது என்பதுதான்.
மனிதனை  பயமுறுத்தும் நோக்கமெல்லாம் அதற்கு இல்லை, தான் பிழைத்திருக்க 
வேண்டும் என்று இதை செய்தது..

இதற்கு மேலும் யாரும் இயற்கை வாழ்வின் முறையை தெளிவாக சொல்ல முடியும் என்று எனக்கு தோன்றவில்லை!

காட்டின் இடையே வசித்து உணர்ந்த அனுபவத்தை இந்த வாசிப்பு கொடுத்து விட்டது எனக்கு!

எத்தனை discovery சேனல் வந்தாலும் இது போன்ற புத்தக அனுபவம் கொடுக்குமா என தெரியவில்லை! Jim Corbett ன் மீதி புத்தகங்களை தேடி படிக்க முடிவெடுத்துள்ளேன்!


சாமனியன் மனோஜ் 


Monday, January 26, 2015

உதகையில் ஒரு அதிர்ச்சி பயணம்



இரண்டு பத்திரிக்கைத்துறை நண்பர்களுடன் சமீபத்தில் உதகை வரை சுற்றுலா சென்றிருந்தேன். சென்னையில் இருந்து காரில் சென்றோம்.
எங்கள் பயணத்தின் இரண்டாம் நாள் கத்ரீன் அருவியை தேடி சென்று கொண்டிருந்தோம், வழி கேட்டு கேட்டு ஒரு வழியாக  அந்த இடத்தை அடைந்தோம் ஆனால் பிறகுதான் தெரியும் அது அருவி கொட்டும் இடம் இல்லை வியூவ் பாயிண்ட் எனப்படும் தொலைவில் இருந்து அருவியை ரசிக்கும் இடம் என்று. அருவியில் ஒரு கும்மாள குளியல் போடலாம் என்று நினைத்தால் என்னடா இப்படி ஆகி விட்டது என்று யோசித்து கொண்டிருக்கையில் ஊரில் ஒரு பெரியவர் பக்கத்தில் மாசி காடு என்ற ஒரு இடம் இருப்பதாகவும், அங்கு இந்த அருவியின் நீரோட்டம் இருப்பதாகவும் அந்த இடம் அழகாக இருக்கும் என்றும் கூறினார். நாங்கள் நால்வருமே புகைப்பட பைத்தியங்கள் ஆகையால் எப்படியும் அங்கு சென்று பார்த்து விட்டு நல்ல இயற்கை புகைப்படங்களை எடுத்து வரலாம் என்று அந்த இடத்தை தேடி புறப்பட்டோம்.  எங்களுக்கு சொல்லபட்டிருந்தது அறைவேணு என்ற ஊரில் இருந்து 2 கீ மீ தூரத்தில் உள்ளது என்று மட்டுமே!




மெதுவாக காரை செலுத்தி போய்  கொண்டிருக்கையில் பெட்ரோல் தேவைப்பட்டது, காருக்கு அல்ல எங்களுக்குதான் அருகில் ஒரு டீ கடையில் வண்டியை நிறுத்தினோம், அங்கு என நடந்தது என்பதை சொலவே இவ்வளவு பீடிகை.. நாங்கள் உள்ளே அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் உள்ளே ஓடி வந்து மொபைலில் எதோ டவுன்லோட் ஆகி கொண்டிருப்பதாகவும் பார்த்து வைக்கும்படியும் அந்த டீ கடைக்காரரை கேட்டு கொண்டான் கூடவே தனக்கு ஹான்ஸ் ( chewing tobacco) வேண்டும் என்றான்.

அப்பொழுதுதான் அந்த சிறுவனை  கவனித்தேன் 13 ல் இருந்து 14 நான்கு வயதிருக்கலாம்(பின்னால் அவனிடமே விசாரித்து உறுதிபடுத்தி கொண்டோம்) சென்னையில் பிறந்து வளர்ந்ததால் நான் பலமுறை இது போன்ற சிறுவர்களை பார்த்திருகின்றேன் இருந்தாலும் இந்த சிறுவனை பற்றி அந்த கடை காரரிடம் விசாரித்தேன், அவர் சொன்ன ஒவ்வொன்றும் சிறிது அல்ல பெரிய அதிர்ச்சியை அளித்தது. என்ன இவன் ஹான்ஸ் வாங்கிட்டு போறான்னு கேட்டேன் நீங்க வேறங்க அவன் டெய்லி சரக்கடிப்பான் இதெல்லாம் ஒரு மேட்டரா கேட்டாரு, நாங்க அண்ணா காமெடி பண்ணாதீங்க உண்மைய  சொல்லுங்கன்னு கேட்டேன்.. அவர் நீங்க வேற தம்பி பொய் சொல்லி எனகென்ன அக போகுது வேணும்னா அவனையே கேளுங்கன்னு அவன கூப்பிட்டாரு, தம்பி என்னடா சரக்கு எல்லாம் அடிப்பியாமே சொல்லவே இல்லன்னு பேச்சு குடுத்தேன், முதலில் தயங்கினாலும் பின்பு மட மட வென அவனை பற்றி சொல்ல ஆரம்பித்தான். 6ம் வகுப்பில் படிப்பை நிறுத்தி கொண்டதாகவும், தற்போது ஒரு லாரியில் கிளீனர் வேலை செய்வதாகவும் சொன்னான், தினமும் ஒரு குவார்டரில் இருந்து ஹாப் பிராண்டி சாப்பிடுவேன் என்றும் கூறினான்,அப்போ ஹான்ஸ் யாருக்குடா என்றால் எனக்குதான் என்று சிரித்து கொண்டே சொல்லி விட்டு சென்றான், அதிர்ச்சியில் இருந்து மீளாமல், இவங்க அம்மா அப்பா என்ன பண்றாங்க அண்ணா என்று தொடர்ந்தேன்,



அவர் அவங்க பக்கத்துல இருக்க  எஸ்டேட்ல வேலை பாக்குறாங்க இந்த புள்ளைய கெடுத்ததே அவங்கதானும் சொன்னார், இவங்க அந்த சின்ன புள்ளைய வச்சுக்கிட்டே ரெண்டு பெரும் குடிப்பாங்க, கொழந்தை கேக்குதுன்னு அதுக்கும் கொஞ்சம் ஊட்டி வளத்துடாங்க, அம்மா அப்பா ரெண்டு பேரும் வேளைக்கு போகும்போது இவன் ஏன்  படிக்கலன்னு கேட்டேன், அப்போதான் தெரிந்தது இவன் படிப்பை விடல பள்ளிய விட்டு இவன அனுப்பிட்டாங்கனு, 6வது படிக்கும்போது வகுப்பிற்கே ஹான்ஸ் எடுத்து சென்று மென்று துப்பியுள்ளான், பார்த்த ஆசிரியர் காதோடு சேர்த்து அடித்து அனுப்பி விட்டார். இந்த ஏரியா வைன் ஷாப் க்கு டெய்லி படி அளக்கிறதே இவன்தான் சார் என்றார், இந்த சைஸ்ல இருக்க பையனக்கு யாருனே சரக்கு குடுப்பானு  கேட்டேன், அதற்கு அவர் இவன் போன தரமாட்டாங்க அதனால அதுக்கும் ஒரு புரோக்கர் வச்சுருகான் 10 ரூபா கமிசன் ஒரு குவார்ட்டருக்கு என்றார், இவன் மட்டும் இல்லை  சார் இங்க நிறைய பசங்க சின்ன வயசுல இருந்தே கெட்டு போய்டுறாங்கன்னும் சொன்னார்.  என்னதான் வாய் பேசி கொண்டே இருந்தாலும் மனசு என்னவோ செய்தது அமைதியாக எழுந்து பயணத்தை தொடர்ந்தோம்,

இது தவறா சரியா? அப்படியே இருந்தாலும் அந்த சிறுவனின் பெற்றோர் செய்த தவறா அரசாங்கத்தின் தவறா இல்லை அந்த சிறுவனின் தவறா! ஆண்டவனின் தவறா! தெரியவில்லை!

நெடு நேரம் எங்கள் நால்வர் இடையே அமைதியும் சிந்தனையும் சேர்ந்தே பயணம் செய்தது!


சாமானியன் மனோஜ்


Aluval

கொட்டும் மழைக்கு பயந்து
வண்டியை நிறுத்தி விட்டு கடையோரம் ஒதுங்கினேன்!
மழை கோட்டு  அணிந்து இருந்தும் மனதில் சிந்தனை!
வேளைக்கு போகலாமா வேண்டாமா என்று!
தெரு முனை டீ கடையில் இருந்து
ஒரு சிறுவன்
சாக்கு பை போர்த்தி கொண்டு
கொட்டும் மழையில் நடந்து வந்தான்
நான் நின்ற கடைக்கு டீ கொடுப்பதற்கு!

.
.
.
.
மௌனமாய் சாலையில் இறங்கி வண்டியை நகர்த்தினேன் அலுவலகத்தை நோக்கி!

Saturday, January 24, 2015

மசால் தோசையும் 99 ரூவாயும்




தலைப்பு பார்த்துட்டு எதோ புத்தக விமர்சனம் எழுத போறேன்னு தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்! நமக்கு அம்புட்டு இலக்கிய ஞானம் கிடையாது!

மணிகண்டன் என்ற ஒருத்தர் எனக்கு பேஸ் புக் வகையில்தான் தெரியும்.. அதுவும் ரொம்ப பெரிய எழுத்தாளர் உங்க இஷ்டத்துக்கு தெருவுல வந்துள்ள கவிதை பாட மாட்டேனு தைரியமா சொன்னவருன்னு ஒரு பெரிய அறிமுகத்துலதான் அவருக்கு நட்பு அழைப்பு கொடுத்தேன் மனுசனும் அதை ஏற்று கொண்டார்! 

அவர் போடும் நிலைதகவல் முக்கால்வாசி நிசப்தம் என்னும் வலை பூவில் போய்தான் முடியும்.. நானும் நிசத்பமாய் படித்து விட்டு சப்தம் போடாமல் சென்று விடுவேன்!

பாதி நேரம் அவர் போடும் நிலை தகவலை மட்டும் அரை குறையாய் படித்து விட்டு கண்டபடி கமெண்ட் செய்பவர்களையும் அதற்கு மணி சார் தலையில் அடித்து கொண்டு ப்ளாக் முழுசா படிசீங்களா கேக்குறதும் நான் அதிகமா பார்த்தது!


எதுகை மோனை பெரிதாய் இருக்காது! எங்கயோ அகராதியில் தேடி படிக்க வேண்டிய சொற்கள் இருக்காது! ஒவ்வொரு நிகழ்வையும் அவர் எழுதும் விதம் அந்நிய தன்மை இல்லாமல் இருக்கும்! ஏதோ ஒரு டீ கடைக்காரரோ, பஸ் ல பக்கத்துக்கு சீட்ல உக்காந்து பேசிட்டு வர நண்பர் மாதிரியோதான் அவர் கதை பயணிக்கும்.. 

இன்னைக்கும் வரைக்கும் அவர் எழுதுவது அனைத்தும் அவர் சொந்த அனுபவமா இல்ல கற்பனைகளைதான் இவ்ளோ அழகா எழுதுறாருன்னு ஒரு குழப்பம் இருந்துட்டுதான் இருக்கு அதை தெரிந்து கொண்டால் சுவாரசியம் போய்  விடும் அதனால அதை அப்படியே விட்டு விடலாம்! 


மசால் தோசை படிக்கும்போதும் சரி நிசப்தம் படிக்கும்போதும் சரி ஒன்னே ஒன்னுதான் எப்போவும் மனசுல தோன்றி மறையும்! நகரத்துல பிறந்து வளர்ந்ததால்தானோ என்னவோ நமக்கு இத்தனை அனுபவங்கள் கிடைக்கவில்லையோ என்று, ஆனால் படிக்க படிக்க இவர் கதைகள் போல நமது அனுபவங்களும் கண் முன்னே சிறிதாய் நிழலாடி செல்லும்! 

அப்பொழுதெல்லாம் யோசித்து கொள்வேன் நாமும் இந்த மாதிரி எழுதலாமே என்று... யோசிப்பது மட்டுமே நடக்கும் நாம்தான் வாழைபழ சோம்பேறி கூட்டம் ஆயிற்றே தமிழில் டைப் செய்ய தயங்கியே பல முறை தூங்கி இருக்கின்றேன்!



நம்மில் பலர் தலைமுடி நரைத்து தள்ளாடி உட்காரும் காலம்வரை அனுபவங்களை அசை போட்டு பார்ப்பதும் இல்லை.. எங்கோ எதன் பின்னலோ கண் மூடி காற்று வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் நமக்கு அனுபவங்களை நின்று ரசிக்கவும் திராணி இல்லை.. அவ்வப்போது இந்த மாதிரி எளிமையான புத்தங்கள் நம் மனதை மன சாட்சியை கீறி பார்த்து சென்று விடுங்கின்றன.

சல்மான்கான் மற்றும் முஸ்லிம் பெரியவரும் மனதை விட்டு அகல சில நாட்கள் ஆகும் என்றே நினைக்கின்றேன்! 


இந்த புத்தம் சிறந்தது அல்லது இவர் சிறந்த எழுத்தாளர் என்று எடை போடும் அளவு எனக்கு தகுதி இல்லை, ஆனால் வாசகனாய் எனக்கு பிடித்திருந்த காரணத்தால் நேரம் ஒதுக்கி இதை பற்றி எழுத தோன்றியது!

மசால் தோசை எனக்கு பிடித்தது! பசி இருந்தால் நீங்களும் வாங்கி படியுங்கள்!

சாமானியன் மனோஜ்