Saturday, February 14, 2015

"காதலர் தின வாழ்த்துக்கள்"



ஒரு அழகான இளவேனிற்காலம்!

பச்சை பசேல் என அடர்ந்த கானகம்!
குயில்கள் கானம் இசைக்க,
ஊனுண்ணிகள் எங்கோ காணாமல் போயிருக்கும் போல!
மான்களும் மந்திகளும் ஆனந்தமாய் கூத்தாடின!

சிறு சிறு கொண்டை வைத்த வண்ண மயில்கள்,
தோகை விரித்து அழகாய் ஆடி எனக்கு வழிகாட்டின,
சிட்டு குருவிகள் தன் வெல்வெட் சிறகை
படபடவென அடித்து என்னை வரவேற்றன!

எங்கும் பசுமை! எல்லாம் இளமை! ரசிக்கும் தனிமை!

ரசித்து கொண்டே வெண்பச்சை பாசி கம்பளம் விரித்த தரைபரப்பில் சுகமாய் நடந்தேன்!
சற்று முன்னர் பெய்த மழை புல் பூண்டு மரம் கலந்து
சுகந்தமாய் ஒரு மணம் எழுப்பி என் நாசியை சுகிக்க செய்தது!

பச்சை விரிப்பில் பாதரசமாய் வழிந்தோடிய ஓடை தண்ணீர்
தாகமே இல்லை எனினும் அருந்த அரிதாய் அழைத்தது!

விலங்காய் நினைத்து நாவினில் அருந்தினேன் தெளிந்த நீரினை
நாத்திகர்களை கூப்பிட்டு அமிர்தம் உண்மைதான்
என தொண்டை கிழிய வாதம் புரிய தோன்றியது!

அமிர்தம் உண்ட வேகத்தில் வேகமாய் எட்டு வைத்தேன்!
அங்கே அழகாய் ஒரு மாளிகை கண்டேன்!

எட்டடுக்கு மாடி இல்லை, தங்கம் இல்லை வைரம் இல்லை!
மரமும் செடியும் புதர்களும் சேர்த்து
இயற்கை அன்னை அழகாய் செய்த மாளிகை அது!


கையில் பழங்களுடன் துடுக்காய் நடந்து வர!
மாளிகையின் மேற்படியில்! ஒய்யாரமாய் ஒரு உருவம்!


இவ்வளவு அழகையும் கானகத்தில் கண்டு சொக்கி போயிருந்தாலும்!
அந்த ஒய்யார உருவத்தை கண்டதும்
மயக்கமே கொள்ள செய்யும் பேரழகி அவள்!

வண்ண பூச்சுகள் இன்றி தெளிவாய் ஒரு முகம்!
ஆபரணங்கள் இன்றி ஜொலிக்கும் அவள் மேனி!
உதிர்ந்த மயில் தோகையை வைத்து செய்த ஆடையில்!
இயற்கை அன்னை கடைந்தெடுத்த வெண்ணெய் முத்தாய் அவள் நின்றாள்!
என் அவள் நின்றாள்!

என் உருவம் தெரிந்தவுடன் உன் விழிகள் காட்டும் பூரிப்பையும்!
என்னை நோக்கி ஓடி வரும் பிஞ்சு பாதத்தையும்!

என்னவென்று நான் சொல்வேன்! அந்த மயில் ஆட்டம் உன்னை விஞ்சவில்லையே!

பிஞ்சு குழந்தை புன்னகை கொண்ட கொஞ்சும் குமரி
உன்னை இமைக்காமல் பார்த்து நின்றேன்!

அருகில் வந்தாய் அழகாய் அளவாய் விரல் கோர்த்தாய்!
பயணம் எப்படி அன்பே உன் செவ்விதழ் திறந்து வார்த்தை உதிர்த்தாய்!
அப்பப்பா குயிலும் தோற்றுதான் போனது உன் தேன் தோய்ந்த குரலிசையில்!
நான் காதலில் விழுந்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை!

இவ்வளவு அழகும் கொண்டு! எனக்கே எனக்கென்று நீ!
 எந்தன் அருகில் நிற்க அமைந்த வாழ்க்கை!

இத்தனையும் மனதில் கொண்டு உன்னை மோக விழியில் பார்த்திடவே!

கண் இமை படபடப்பில் சிட்டுக்குருவியின் வெல்வெட் இறகை வென்று முடித்து! நாணத்தில் நாணலை போல என் தோள்களின் மீதி தலை சாய்ந்தாய்!

காதலுடன் குழப்பமும் வந்தது இந்த காதலனுக்கு!

என் காதலி போல் எந்த கானகமும் ஏன் சிறப்பாய் இல்லை!

                                                "காதலர் தின வாழ்த்துக்கள்"

பின் குறிப்பு: முழுக்க முழுக்க கற்பனையே, நோ கிராஸ் கோச்டீன்ஸ்

காதலுடன் மனோஜ்

1 comment:

  1. நாத்திகர்களை கூப்பிட்டு அமிர்தம் உண்மைதான்
    என தொண்டை கிழிய வாதம் புரிய தோன்றியது! - semma

    ReplyDelete